தரமற்ற மருந்து இறக்குமதி: சந்தேக நபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Date:

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் இன்று (17) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 07 சந்தேக நபர்களையும் ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

சந்திரகுப்தா, டிசம்பர் 18 ஆம் திகதி, மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகள் கொள்வனவு முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான போது கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 14 அன்று, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, ‘தரமற்ற’ மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதாக அறிவித்திருந்தார்.

அதேநேரம், தரமற்ற மருந்து கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பில் பொறுப்புவாய்ந்த சகல தரப்பினரையும் கைது செய்து, பாகுபாடின்றி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...