நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Date:

அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் இராஜாங்க நிதி அமைச்சர் ஆகியோருக்கு இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (17) காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வைத்திய சேவை ஒருங்கிணைந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...