நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு!

Date:

பாராளுமன்றத்தில் இன்று 23ஆம் திகதியும் நாளை 24ஆம் திகதியும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (online safety bill) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறுகிறது.

அரசாங்கம் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இலங்கையில் செயல்படும் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

இந்நிலையில், விவாதத்தை நடத்தக்கூடாதென எதிர்க்கட்சிகள் விவாதத்தை நடத்துவதா? இல்லையா? என வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தன. அதன் பிரகாரம் சபாநாயகரால் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் விவாதத்தை தொடர்ந்து நடத்த ஆளுங்கட்சி ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் எதிராக வாக்களித்தன.

விவாதத்தை நடத்த ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிராக வாக்களின.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...