பாகிஸ்தான் செய்த நன்றியை எமது நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள்: பாக். உயர்ஸ்தானிகரின் பிரியாவிடை வைபவத்தில் ஹக்கீம்

Date:

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பாகிஸ்தான் நாட்டையும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானையும் மறக்கமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி தமது பதவிக் காலத்தை முடித்து நாடு திரும்புவதால் அவருக்கான பிரியாவிடை வைபவம் இலங்கை சுற்றுலாத்துறை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் ஏற்பாட்டில் கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது ரவூப் ஹக்கீம் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசும் சில அதிகாரிகளும் கொவிட் 19 காலத்தில் முஸ்லிம்களது ஜனாசாக்களை எரித்தார்கள்.அதனை இலங்கை வந்திறங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் ஆரவாரமில்லாமல் அமைதியாக முன்னாள் ஜனாதிபதியிடம் பேசி முஸ்லிம் ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார்.

மேலும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் வாக்கெடுப்பாக பாகிஸ்தான் இலங்கைக்கு வாக்களிப்பதற்காக சில நாடுகளின் ஆதரவுகளைப் பெற்றுக் கொடுத்தார்.

இனரீதியாகவும், உலக சுகாதார கொவிட் சுற்றறிக்கை மீறியும் இலங்கையில் கொவிட் மரணிப்பால் முஸ்லிம்களது ஜனாசாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டு வந்தன.

இதனை தடுத்து எமக்கு அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களே என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இவ் வைபத்திற்கு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், சுற்றலாத்துறை மற்றும் கானியமைச்சின் செயலாளர் சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனத்தின் தலைவர் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், முஸ்லிம் கெல்ப் நிறுவனத்தின் மிஹ்லார் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...