பாராபட்சமற்ற விசாரணைக்காக அரபுக்கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது: முஸ்லிம் சமய திணைக்களம் அவசர நடவடிக்கை!

Date:

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியிலுள்ள பிரபலமான அரபுக்கல்லூரி ஒன்றில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆசிரியர் ஒருவரால் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக முறையான விசாரணை முடிவுறும் வரை கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மேற்படி சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரணை செய்ய திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே திணைக்களத்தின் விசாரணை முடியும் வரை இன்று முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி பாதுகாப்பாக மாணவர்களை பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறும் திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...