பாராபட்சமற்ற விசாரணைக்காக அரபுக்கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது: முஸ்லிம் சமய திணைக்களம் அவசர நடவடிக்கை!

Date:

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியிலுள்ள பிரபலமான அரபுக்கல்லூரி ஒன்றில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆசிரியர் ஒருவரால் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக முறையான விசாரணை முடிவுறும் வரை கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மேற்படி சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரணை செய்ய திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே திணைக்களத்தின் விசாரணை முடியும் வரை இன்று முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி பாதுகாப்பாக மாணவர்களை பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறும் திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...