மின்சார கட்டணத்தை 3.3 வீதத்தினால் குறைக்க முன்மொழிவு!

Date:

மின்சார கட்டணத்தை 3.3 வீதத்தினால் குறைக்குமாறு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை மின்சார சபை இந்த வருடம் 71,000 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காது செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், 0 முதல் 30 மின்சார அலகுகளை இடைப்பட்ட பாவனையாளர்களின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் மாதாந்த கட்டணத்தை 25 ரூபாவினாலும் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், 31 முதல் 60 மின்சார அலகு வரை ஒரு மின்சார அலகுக்கான கட்டணம் 3 ரூபாவினாலும் மாதாந்த கட்டணம் 30 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரைக்கட்டப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...