வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: கறுப்பு ஆடையில் பாராளுமன்றம் வந்த எதிர்க்கட்சியினர்

Date:

புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

முதல் பாராளுமன்ற அமர்விலேயே அரசாங்கத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகள் கறுப்பு ஆடைகளை அணிந்தவாறு பாராளுமன்றத்துக்கு வந்தனர்.

இதுதொடர்பில் கருத்து வெளியட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,

”நாட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகத்தான் இன்று கறுப்பு உடையில் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளோம்.” என்றார்.

எவ்வாறாயினும், தலதா அத்துகோரள, கபீர் ஹாசிம் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண உடையிலேயே பாராளுமன்றத்திற்கு வந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...