2023 இல் 13.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உம்ரா யாத்திரை!

Date:

2023 ஆம் ஆண்டில் 13.5 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உம்ரா யாத்திரையை மேற்கொண்டதாக சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட அல்-அரேபிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு உம்ரா யாத்திரையை அதிகளவான சர்வதேச யாத்ரீகர்கள் மேற்கொண்டதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதன் முந்தைய ஆண்டை விட (2022) மொத்தம் 5 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உம்ரா என்பது சவூதி அரேபியாவில் உள்ள மாக்காவுக்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாகும்.

இது குறிப்பிட்ட திகதிகளைக் கொண்ட ஹஜ் யாத்திரையினை போலன்றி, ஆண்டின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...