2023 இல் 13.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உம்ரா யாத்திரை!

Date:

2023 ஆம் ஆண்டில் 13.5 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உம்ரா யாத்திரையை மேற்கொண்டதாக சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட அல்-அரேபிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு உம்ரா யாத்திரையை அதிகளவான சர்வதேச யாத்ரீகர்கள் மேற்கொண்டதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதன் முந்தைய ஆண்டை விட (2022) மொத்தம் 5 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உம்ரா என்பது சவூதி அரேபியாவில் உள்ள மாக்காவுக்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாகும்.

இது குறிப்பிட்ட திகதிகளைக் கொண்ட ஹஜ் யாத்திரையினை போலன்றி, ஆண்டின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...