2025 இற்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் முற்றுபெற வேண்டும்: ஜனாதிபதி

Date:

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்திரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

நான்கு நாள் விஜயமான ஜனாதிபதி இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளதுடன், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள உள்ளார்.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...