உயர்தர பரீட்சை நிலையங்களில் வெளிச்செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்!

Date:

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களில் வெளிச் செயற்பாடுகளை நிறுத்துமாறு பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 2302 பரீட்சை நிலையங்களில் 04ஆம் திகதி தொடக்கம்
31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரீட்சை நடைபெறும் இக்காலப்பகுதியில் பரீட்சார்த்திகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமான எவ்வித செயற்பாடுகளையும் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அனைத்துத் பாடசாலை அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு புறம்பாக, பரீட்சை நிலையங்களாக செயற்படும் சில பாடசாலைகளில், பரீட்சார்த்திகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே பரீட்சை நிறைவுறும் வரை  இடைஞ்சல் ஏற்படும்
விதமாக எவ்வித செயற்பாடுகளையும் பரீட்சை நிலையங்களில் நடாத்த
வேண்டாம் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...