சர்வதேச தரத்திற்கு அமையவே சட்டத்திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன!

Date:

இலங்கையில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்துவதற்காகவே சர்வதேச தரத்திற்கு அமைய  புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் Marc-Andre-Francheசிடம் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும், நீதியமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (19) நீதியமைச்சில் நடைபெற்றது.

உலக நாடுகளில் நீதி செயற்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அனுபவங்கள் சம்பந்தமாகவும் இணைப்பாளர், நீதியமைச்சருடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் சட்டத்தின் ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்த இலங்கை எடுக்கும் முயற்சியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழிக்காட்டல்கள் மிகவும் முக்கியம் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...