ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

Date:

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடக்கிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியினை சந்திக்க வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முற்பட்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனைதொடர்ந்து பொலிஸாரும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட முரன்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உட்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உட்பட்ட குழுவினருக்கு இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...