துறைமுக அதிகாரசபை ஏற்பாட்டில் 50 எம்.பிகள் கப்பலில் இன்ப சுற்றுலா!

Date:

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது.

துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்ப சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுவிற்கு உணவு மற்றும் ஏனைய பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு துறைமுக வளாகத்தில் ஒரு குறுகிய கப்பல் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் பங்கேற்குமாறும் துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விடுத்திருந்த அழைப்பு கடிதத்தின் பிரகாரம் இந்த எம்.பிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...