பாராபட்சமற்ற விசாரணைக்காக அரபுக்கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது: முஸ்லிம் சமய திணைக்களம் அவசர நடவடிக்கை!

Date:

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியிலுள்ள பிரபலமான அரபுக்கல்லூரி ஒன்றில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆசிரியர் ஒருவரால் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக முறையான விசாரணை முடிவுறும் வரை கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மேற்படி சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரணை செய்ய திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே திணைக்களத்தின் விசாரணை முடியும் வரை இன்று முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி பாதுகாப்பாக மாணவர்களை பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறும் திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...