சமூக ஒற்றுமைக்காக ஒன்றுபட்டு உழைக்கும் திஹாரிய உலமாக்களின் சேவை முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதோர் முன்னுதாரணம் : கலாநிதி ஹஸன் மெளலானா

Date:

முஸ்லிம்கள் பிளவுபடுவதை தவிர்க்குமுகமாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கம்பஹ மாவட்ட திஹாரியைச் சேர்ந்த அஹ்லுஸ் ஸுன்னத்-வல்-ஜமாஅத் தரீக்கா, தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி மற்றும் தெளஹீத் ஜமாஅத் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்ட உலமாக்கள் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமையுடன் “துரறு உலமா திஹாரிய” என்ற அமைப்பை உருவாக்கி ஒற்றுமையென்ற ஒரே கொடியின் கீழ் சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்படுவது முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதோர் முன்னுதாரணமாக திகழ்கின்றது என இஸ்லாமிய ஒற்றுமை பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவரான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அல்-ஆலிம் முஹம்மத் பர்தி (ஹஸனி,அரூஸி) அவர்களுடைய தந்தை அல்-ஹாஜ் முஹம்மத் நாஸிர் கடந்த சனிக்கிழமை (03) காலம் சென்றதை முன்னி்ட்டு அவருக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக திஹாரியிலுள்ள அவரது இல்லத்துக்கு இஸ்லாமிய ஐக்கிய பேரவை ஸ்தாபகர்கள் சார்பில் விஜயம் செய்த வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகளை இல்லாதொழித்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துரறு உலமா திஹாரிய அமைப்பினர் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நல்ல வேலைத்திட்டத்தை இலங்கையி்ல் வாழும் சகல முஸ்லிம்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதுடன், முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகளை முஸ்லிம் சமூகத்திலுள்ள உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக சேவைகள் அமைப்புகள் முன்வந்து ஒன்றிணைந்து மும்முரமாகச் செயல்படுவது காலத்தின் தேவையாகும் என கலாநிதி ஹஸன் மெளலானா மேலும் தெரிவித்தார்.

அல்-ஆலிம் முஹம்மத் பர்தி (ஹஸனி,அரூஸி) அவர்கள் துரறு உலமா திஹாரிய அமைப்பின் முக்கியமான ஒருவராகவும் அஹ்லுஸ் ஸுன்னத்-வல்-ஜமாஅத் தரீக்காவை சேர்ந்த மூத்த உலமாக்களில் ஒருவராகவும் முஸ்லிம் சமூகத்திற்கு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

துரறு உலமா திஹாரிய அமைப்பு கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு பல சமூக பணிகளை ஒற்றுமையுடன் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த விஜயத்தின் போது இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத், துரறு உலமா திஹாரிய அமைப்பின் முக்கியமான மூத்த உலமாக்கள் மற்றும் அல்-ஆலிம் பர்தி ஹஸனி அவர்களின் சகோதரர்கள், குடும்ப அங்கத்தவர்களென பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...