ஜனாதிபதி ரணிலின் ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகை 28இ095 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

Date:

இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும் பொருளாதார புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தினால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, அரசின் மொத்த கடன் தொகையானது 24 ஆயிரத்து 671 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் அந்த கடன் தொகையானது 28 ஆயிரத்து 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 15 மாத கால ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகையானது 3 ஆயிரத்து 424 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தின் முதல் 11 மாதங்களின் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நவம்பர் வரையான 11 மாதத்தில் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது ஆயிரத்து 601 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன் கடந்த 2023 ஆம் ஆண்டின் 11 மாத காலத்தில் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது 2 ஆயிரத்து 20 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனை தவிர வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், 5 ஆயிரம் மில்லியன் டொலர் மேலதிக கடன் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...