நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை!

Date:

நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாணின் நிகர எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், பாண் ஒன்றின் நிகர எடையை விட 13.5 கிராம் வித்தியாசம் காணப்படலாம் என குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரைவாசி பாணின் நிகர எடை 225 கிராம் எனவும், அதில் 9 கிராம் வித்தியாசம் காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...