பொருளாதார மீட்சி தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் குறித்துப் பாராட்டிய டொனால்ட் லு!

Date:

இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu)தெரிவித்துள்ளார்.

இந்தோ-பசுபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவனத்தில் (USIP) பேசிய டொனால்ட் லு, இலங்கைக்கு ரோந்து படகுகள் மற்றும் விமானங்களை வழங்குவதன் மூலம் இது செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

“அமெரிக்க அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு ரோந்துப் படகுகளை வழங்கும். இலங்கையின் கரையோர எல்லைகளில் ரோந்து செல்ல உதவும் கிங் விமானத்தையும் இந்த ஆண்டு வழங்க உள்ளோம்,”

இந்தோ-பசுபிக் கடல்சார் கள விழிப்புணர்வு (IPMDA) முயற்சியின் மூலம், தெற்காசியா உட்பட இந்த பரந்த பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு நிகழ்நேர வணிக செயற்கைக்கோள் தரவை அமெரிக்கா வழங்கும் – என்றும் அவர் மேலும் கூறினார்.

இது கடற்கொள்ளையர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாடுகள் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்ள இது உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மீட்சி தொடர்பான இலங்கையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்துப் பாராட்டிய டொனால்ட் லு, இந்தியா போன்ற பங்காளிகளுடன் இணைந்து நிர்வாகத்தின் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் வெற்றிக்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...