வடமாகாணத்தில் அதானிக் குழுமம்: பூநகரி காற்றாலை திட்டத்துக்கு அனுமதி!

Date:

இலங்கையின் வட மாகாணத்தில் பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டத்தில் 355 மில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ளும் Adani Green Energy (Sri Lanka) Limited இன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த திட்டம் காற்றாலை மின்சக்தி திட்டமாக அமைவதோடு மட்டுமல்லாமல் மின்சக்தி நெருக்கடி, பொருளாதாரம், சூழல் நிலைபேறான தன்மை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் வகையில் அமைய உள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை மின்சக்தி திட்டமாக இது இருக்கும் என்பதுடன், இப்பிராந்தியத்தில் நிலைபேறான வலுசக்தியின் முக்கிய புள்ளியாக மாறும் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கிறது.

234MW திறன் கொண்ட இத்திட்டம், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனுக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

 

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...