‘அழிவுக்கு மத்தியில் கொண்டாடுவோம்’: காசா முகாமில் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி

Date:

காசாவில் இன்னல்களுக்கு மத்தியிலும், இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கூடாரங்களில், அவ்வப்போது  சில மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை (16) அப்படி நிகழ்ந்த ஒரு திருமணத்தையே இங்கு காண்கிறீர்கள்.
மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் எல்-பலாவில் இடம்பெயர்ந்தவர்களுக்கான தற்காலிக முகாமின் நடுவில்,  வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒரு பலஸ்தீனிய ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.

மஹ்மூத்  (23) மற்றும் ஷைமா காசிக்,(18) எட்டு மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர், ஆனால் கடந்த அக்டோபரில் தொடங்கிய காசா மீதான இஸ்ரேலியப் போரின் காரணமாக திருமணத்தை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் தங்கள் இதயங்களிலும், இடம்பெயர்ந்த அயலவர்கள் மற்றும் நண்பர்களின் இதயங்களிலும் மகிழ்ச்சியின் சாயலைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் இந்த திருமண விழாவை நடத்தினர்.

இதேவேளை ‘நாங்கள் சாதாரண சூழ்நிலையில் பிரம்மாண்டமாக அழகான உடைகளில் திருமணத்தை எடுக்க கனவு கண்டோம், ஆனால் போரின் அழிவுகள் எங்களிடமிருந்து அனைத்தையும் எடுத்தன,”எங்கள் வீடுஇ உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்றும் திருமன ஜோடிகள் கருத்து தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...