இணையப் பாதுகாப்புச் சட்டம் நாட்டிற்கு அவசியம்? அமைச்சர் அலி சப்ரி விளக்கம்!

Date:

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவான விளக்கத்தினை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே இவ்விடயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன்போது இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கின்ற சில உட்பிரிவுகள் குறித்து பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அரசாங்கம் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதி இராஜாங்கச் செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சிவில் அமைப்புக்களின் பரிந்துரைகளையும் உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதையும் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...