‘இந்தியாவின் ஒரு பகுதிதான் இலங்கை’:ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்குவாதம்

Date:

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த கருத்து பல்வேறு மட்டத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அறிக்கைக்கு எதிராக அரசியல் காட்சிகள் மற்றும் அரசியல் தலைமைகள் நாளாந்தம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையிலே  இன்று (20) நாடாளுமன்றத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியமையானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா என  விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இந்த விடயம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா அல்லது தனிப்பட்ட கருத்தா என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தொடர்பில் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன உரிமை உள்ளது எனவும் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், குறித்த விடயம் சமூக ஊடகங்களில் திருப்பு படுத்தப்பட்டுள்ளதாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...