இந்தியா சென்றதால் பிரதான அரசியல் தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர்: அனுர

Date:

இந்தியாவுக்குச் சென்று கலந்துரையாடியமையால் பிரதான  அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அச்சமடைந்திருப்பதாக   மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர் தமது இந்திய பயணம் தொடர்பில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்திய விஜயத்தின்போது பல விடயங்கள் குறித்து நாங்கள் அவதானம் செலுத்தினோம். அதன்போது, நாட்டின் வளங்களை தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தேன். இந்திய விஜயம் குறித்து சஜித் பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தரப்பினர் கலக்கமடைந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். அதனைக் கண்டு நாங்கள் கலக்கமடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முரண்பாடு இருப்பதால் இருவரும் ஒன்றுசேர முடியாது.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா, சஜித் போன்ற தலைவர்கள் ஒரே மேடைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா அழைத்து பேசியதால் அச்சமடைந்துள்ள இந்த அரசியல் தலைவர்கள் ஜே.வி.பியை ஓரம் கட்டுவதற்காக ஒரேமேடைக்கு வருவார்கள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் வளர்ச்சியாலும் வல்லரசு நாடுகள் அழைப்பதாலும் அச்சமடைந்துள்ள சிங்கள தலைவர்களால் தமக்கு எதிராக மேலும் பல அதிசயங்கள் இலங்கைத் தீவு அரசியலில் நடக்கக்கூடும் என்றும் அவர் எதிர்வு கூறினார்.

இந்தியாவைக் கையாள தங்களால் தான் முடியுமென இந்த தலைவர்கள் இதுவரைக் காலமும் நம்பியிருந்தனர்.

ஆனால், இப்போது அது ஜே.வி.பியினாலும் முடியுமென்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதையும் அவர் விபரித்தார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...