இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தல்: முக்கிய மூவரிடையே போட்டி; வெற்றியை நோக்கி பிரபோவோ

Date:

உலகின் 3ஆவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் இன்று (14) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சரான பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2ஆவது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு அமைச்சர் பிரபோலோ 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவை பெற்றவர். துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...