இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தல்: முக்கிய மூவரிடையே போட்டி; வெற்றியை நோக்கி பிரபோவோ

Date:

உலகின் 3ஆவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் இன்று (14) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சரான பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2ஆவது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு அமைச்சர் பிரபோலோ 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவை பெற்றவர். துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...