எதிர்காலத்தில் வரிச்சுமை குறைக்கப்படும் ஏனையவர்களை விமர்சித்து நெருக்கடிகளை தீர்க்க முடியாது ஜனாதிபதியின் அரச கொள்கை பிரடகன உரை

Date:

பொருளாதார  நெருக்கடிகளை சபிப்பதன் மூலம் அதிலிருந்து மீள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றதின் ஐந்தாவது அமர்வு சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்ளை பிரகடன அறிக்கையினை சபையில் சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றி வருகிறார்.

உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்தன. தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளை எதிர்கொண்டனர். சில சமயங்களில் நெருக்கடியில் இருந்து மீண்டவர், சில சமயங்களில் நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை.

புத்தர் தனக்கே விளக்காக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.நமக்கு நாம் விளக்காக இல்லாவிட்டால் நன்மை செய்ய முடியாது. அது நாட்டுக்கும் நல்லதல்ல.

பணவீக்கம் 50 வீதத்திற்கு அதிகமாகவும் டொலரின் பெறுமதி 380 ரூபாவுக்கும் அதிகமாகவும் இருந்தது. இன்று பணவீக்கம் 4 வீதத்திற்கு குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி 320 ரூபாவாக குறைந்துள்ளது. இவைதான் நாம் ஏற்படுத்திய மாற்றம்.

உலகில் பல நாடுகள் தமது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளை முறையாக உணர்ந்தே அதற்கான தீர்வுகளை கண்டன. ஏனையவர்களை விமர்சித்து எவரும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை.

இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திர தன்மை அடையும் நிலையில் வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...