குப்பி விளக்கு சர்ச்சை: மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Date:

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்தவின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில்,ஊடகப் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு, தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தேவை ஏற்பட்டால் குப்பி விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என நோயல் பிரியந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...