சவூதியில் 1000 தாதியர் வெற்றிடங்களுக்கான நேர்காணல்கள் கொழும்பில்..!.

Date:

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலைக்கான வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.

முதல் சுற்றில் தாதியர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான தாதியர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாவது சுற்றில், தாதியர் டிப்ளோமா பெற்றவர் தாதியர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் உள்ள ஆயிரம் தாதியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடத்தப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...