நாசர் மருத்துவமனை முழுமையாக ஸ்தம்பிதம்: மருத்துவமனை பணிப்பாளர் தடுத்து வைத்து விசாரணை

Date:

காஸாவின் கான் யூனுஸ் பிரதேச நாசர் மருத்துவமனை முற்றிலுமாக செயலிழந்த நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அதனை ஆக்கிரமித்ததோடு மருத்துவமனை பணிப்பாளரை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது.

காசாவில் ஹமாஸ் இஸ்ரேலிடையே போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அப்போது நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறுவதற்கு தனி பாதை திறந்து வைத்தனர் ராணுவத்தினர்.

கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

(அல்ஜஸீரா)

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...