நாசர் மருத்துவமனை முழுமையாக ஸ்தம்பிதம்: மருத்துவமனை பணிப்பாளர் தடுத்து வைத்து விசாரணை

Date:

காஸாவின் கான் யூனுஸ் பிரதேச நாசர் மருத்துவமனை முற்றிலுமாக செயலிழந்த நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அதனை ஆக்கிரமித்ததோடு மருத்துவமனை பணிப்பாளரை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது.

காசாவில் ஹமாஸ் இஸ்ரேலிடையே போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அப்போது நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறுவதற்கு தனி பாதை திறந்து வைத்தனர் ராணுவத்தினர்.

கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

(அல்ஜஸீரா)

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...