நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை

Date:

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால், வெளியில் செல்வதை போதிய அளவு தவிர்ப்பதுடன்,, அடிக்கடி நிறைய தண்ணீர்  அருந்துமாறு மருத்துவ நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.

செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீர், தேங்காய் போன்ற இயற்கை பானங்களை உட்கொள்வதன் மூலம் நீரேற்றத்திற்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் நல்லது என சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் தீவிர வெப்பநிலை காரணமாக நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எனவே, ஆபத்தில் உள்ளவர்கள் சூரிய ஒளியின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் நீரிழப்பைத் தவிர்க்க நீரேற்றமாக இருக்க வேண்டும். குறைந்தது 2.5 லீற்றர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக அத்தியாவசியமற்ற வெளிப்புற செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு பாடசாலை மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...