பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுப்பு தெரிவித்த கெஹலிய!

Date:

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்புரை ஆற்றுகின்றார்.

இந்த அமர்வில் பங்கு கொள்ளவே கெஹலிய மறுத்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும், சிறை காவலர்களின் பாதுகாப்புடன் கெஹலிய நாடாளுமன்றம் செல்ல முடியும் என்பதுடன் சபாநாயகரும் அனுமதியளித்துள்ளார். ஆனால், அவ்வாறு நாடாளுமன்றம் செல்வதற்கு அவர் மறுத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததற்கான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...