பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுப்பு தெரிவித்த கெஹலிய!

Date:

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்புரை ஆற்றுகின்றார்.

இந்த அமர்வில் பங்கு கொள்ளவே கெஹலிய மறுத்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும், சிறை காவலர்களின் பாதுகாப்புடன் கெஹலிய நாடாளுமன்றம் செல்ல முடியும் என்பதுடன் சபாநாயகரும் அனுமதியளித்துள்ளார். ஆனால், அவ்வாறு நாடாளுமன்றம் செல்வதற்கு அவர் மறுத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததற்கான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...