புத்தளம் மன்ப உஸ் சாலிஹாத்தின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு!

Date:

புத்தளம் மன்ப உஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் தலைமையில் நேற்று (பெப்,04) நடைபெற்றது.

கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் (கபூரி ) கலந்து கொண்டார்.

கிராஅத்தை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில்,

76 ஆவது சுதந்திர தினம் கொண்டாப்படுகின்ற நிலையில் சுதந்திர தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கவேண்டும் அதற்கான காரணங்களும் நியாயங்களும் என்ன என்பது பற்றிய ஒரு விளக்கத்தை பல்வேறு கோணங்களில் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையிலும் முஸ்லிம் என்ற வகையிலும் எமது தாய்நாட்டுக்கு நாங்கள் ஆற்றவேண்டிய முக்கியமான பணிகள் என்னவென்பதையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இறுதியில் முதல்வர் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் நன்றி உரையுடன் மறைந்த இஸ்லாஹிய்யா அதிபர் அஷ்ஷைக்,முனீர் உட்பட கல்லூரிக்காக பங்களிப்புச் செய்த பிரமுகர்களுக்காகவும் துஆ செய்வதுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...