பொது சமூக சேவைகள் அமைப்பின் மற்றுமொரு கல்வி நலன்புரி திட்டம்!

Date:

பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டத்தில், இவ் வருடத்திற்கான  அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வின் தொடராக ( 10) சம்மாந்துறை மிரர்(Mirror) தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு,  புத்தகங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கான பிரதம அனுசரனையை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் பொது சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ ஜி.எம் இக்றாம் , அமைப்பின் அமைப்பாளர் எம் ஆர் ஆஷிக் அஹமட்,அமைப்பின் பொருளாளர் பிரோஸ் , அமைப்பின் உறுப்பினர்காளான ஏ.கே.ஹஷான் அஹமட், ஜே.றோசன் அக்தர் அவர்களும், மேலும் மிரர் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான சபீர், ரிப்கான் என பலரும் கலந்து சிறப்பித்தருந்தனர்.

நிகழ்வில் அமைப்பு சார்பாக அமைப்பின் பொருளாளர் இந்த திட்டதின் நோக்கம் தொடர்பாகவும், எதிர் காலத்தில் இந்த திட்டத்தினூடாக மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக எவ்வாறு உதவ உள்ளோம் என்பது தொடர்பாகவும் உரை நிகழ்த்தியிருந்தார்.

-ஏ. கே. ஹஷான் அஹமட்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...