மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ‘நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’

Date:

மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி நண்டை போல நடந்து கொண்டமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி, ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது  எம்.பிக்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அதன் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபை அனுமதியுடன் தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கமைய இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சம்பள அதிகரிப்பு தொடர்பான அண்மைய சர்ச்சைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பொது நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பரிந்துரைத்துள்ளார்.

மத்திய வங்கி தமது ஊழியர்களின் சம்பளத்தை 70 சதவீதம்அ திகரித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானதுடன், இந்த நடவடிக்கை ஆளும் கட்சிமற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...