மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ‘நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’

Date:

மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி நண்டை போல நடந்து கொண்டமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி, ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது  எம்.பிக்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அதன் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபை அனுமதியுடன் தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கமைய இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சம்பள அதிகரிப்பு தொடர்பான அண்மைய சர்ச்சைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பொது நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பரிந்துரைத்துள்ளார்.

மத்திய வங்கி தமது ஊழியர்களின் சம்பளத்தை 70 சதவீதம்அ திகரித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானதுடன், இந்த நடவடிக்கை ஆளும் கட்சிமற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...