மின்சார சபை பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி

Date:

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

விசாரணையின் பின்னர் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குப்பி விளக்கு வெளிச்சத்தில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என கூறிய இலங்கை மின்சார சபையின் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செய்தித் தொடர்பாளரைத் இடைநீக்கம் செய்து விசாரணையைத் தொடங்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...