யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது!

Date:

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில்  663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்களும் குற்றவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 116 சந்தேகநபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் 175 கிராமும் 191 மில்லி கிராம் ஹெராயினும், 171 கிராமும் 197 மில்லி கிராம் ஐஸூம், 515 கிராமும்  538 மில்லி கிராம் கஞ்சாவும், 807 கஞ்சா செடிகளும், 77 கிராமும் 200 மில்லி கிராம் மாவாவும், 296 போதை மாத்திரைகளும், 85 கிராம் மதன மோதகம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேக நபர்களில் 04 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பு காவல் உத்தரவின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான மேலும் இரண்டு பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், 14 சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணையும், 95 பேருக்கு போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 03 சந்தேக நபர்களும், குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வரும் 04 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...