வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு! (படங்கள்)

Date:

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராக பலதரப்புக்களையும் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள்.

அதற்கமைய வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று விசேட ஊடக சந்திப்பொன்று தெஹிவளையில் உள்ள ஜயசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
பொதுச்சொத்துக்களை பாதுகாப்பதற்கான தேவை கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடக சந்திப்பில் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ள பிரபல கபூரிய்யா அரபுக்கல்லூரி,பாபக்கர் மஸ்ஜித்,, கொள்ளுப்பிட்டி மஸ்ஜித், ராஜகிரிய தாருல் இமான் மஸ்ஜித்களின் வக்பு சொத்துக்கள் பற்றின பிரச்சினைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

மேலும், வக்ஃப் சட்டத்தில் திருத்தம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது,
இந்த ஊடகசந்திப்பில் தில்சான் கபூரி, ஹனான் கபூரி,எம் முபாரக், எம்.எச்.எம், லேசில் டி சில்வா, ரஃபியுதீன் சலஃபி, எம் இக்பால் ஹாஜி,சஹீம் நசூர்தீன், எம்.எஸ் ஹில்மி ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...