வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு! (படங்கள்)

Date:

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராக பலதரப்புக்களையும் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள்.

அதற்கமைய வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று விசேட ஊடக சந்திப்பொன்று தெஹிவளையில் உள்ள ஜயசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
பொதுச்சொத்துக்களை பாதுகாப்பதற்கான தேவை கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடக சந்திப்பில் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ள பிரபல கபூரிய்யா அரபுக்கல்லூரி,பாபக்கர் மஸ்ஜித்,, கொள்ளுப்பிட்டி மஸ்ஜித், ராஜகிரிய தாருல் இமான் மஸ்ஜித்களின் வக்பு சொத்துக்கள் பற்றின பிரச்சினைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

மேலும், வக்ஃப் சட்டத்தில் திருத்தம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது,
இந்த ஊடகசந்திப்பில் தில்சான் கபூரி, ஹனான் கபூரி,எம் முபாரக், எம்.எச்.எம், லேசில் டி சில்வா, ரஃபியுதீன் சலஃபி, எம் இக்பால் ஹாஜி,சஹீம் நசூர்தீன், எம்.எஸ் ஹில்மி ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...