வறண்ட காலநிலையால் கொழும்பில் நீர் பற்றாக்குறை

Date:

வறண்ட காலநிலை பல பகுதிகளில் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல்  பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

இதனால் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நீர் நுகர்வுக்காக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருவதே இதற்கு முதன்மையான காரணமாகும்.

வறண்ட காலநிலையால் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடி தண்ணீரை விநியோகப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சவாலை எதிர்கொள்ள, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக உட்செலுத்துதல் தடுப்பை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...