வறண்ட காலநிலையால் கொழும்பில் நீர் பற்றாக்குறை

Date:

வறண்ட காலநிலை பல பகுதிகளில் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல்  பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

இதனால் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நீர் நுகர்வுக்காக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருவதே இதற்கு முதன்மையான காரணமாகும்.

வறண்ட காலநிலையால் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடி தண்ணீரை விநியோகப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சவாலை எதிர்கொள்ள, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக உட்செலுத்துதல் தடுப்பை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...