50 வீதமான பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை!

Date:

50 வீதமான பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை உள்ளது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவரிடையேயான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கி 5 ஆயிரத்து 133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமையவே இந்தக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்னு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 10 ஆயிரத்து 221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலேயே 4ஆயிரத்து 983 பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 517 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 85 கிராம் ஹெரோயின், 48 கிராம் ஐஸ், ஆயிரத்து 561 போதை மாத்திரைகள், ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா, 3 கிலோ மாவா, 2 கிலோவுக்கும் அதிகமான மதன மோதக மாத்திரைகள், ஆயிரத்து 285 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ளது.

எனினும், 107 பாடசாலைகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் காவல்துறையினர்
தெரிவித்தனர்.

மேலும், போதைப்பொருள் பாவனையுள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் 5 ஆயிரத்து 133 குழுக்கள் பதில் காவல்துறைமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...