சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் எழுதிய ‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ நூல் வௌியீடு

Date:

சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (25) இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்,உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா ருசைக், அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹமட் அஸ்மீர், சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ்,சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம்,மௌலவி எம்.ஆர். அப்துர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் நூல் ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...