இந்தியா சென்றதால் பிரதான அரசியல் தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர்: அனுர

Date:

இந்தியாவுக்குச் சென்று கலந்துரையாடியமையால் பிரதான  அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அச்சமடைந்திருப்பதாக   மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர் தமது இந்திய பயணம் தொடர்பில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்திய விஜயத்தின்போது பல விடயங்கள் குறித்து நாங்கள் அவதானம் செலுத்தினோம். அதன்போது, நாட்டின் வளங்களை தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தேன். இந்திய விஜயம் குறித்து சஜித் பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தரப்பினர் கலக்கமடைந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். அதனைக் கண்டு நாங்கள் கலக்கமடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முரண்பாடு இருப்பதால் இருவரும் ஒன்றுசேர முடியாது.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா, சஜித் போன்ற தலைவர்கள் ஒரே மேடைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா அழைத்து பேசியதால் அச்சமடைந்துள்ள இந்த அரசியல் தலைவர்கள் ஜே.வி.பியை ஓரம் கட்டுவதற்காக ஒரேமேடைக்கு வருவார்கள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் வளர்ச்சியாலும் வல்லரசு நாடுகள் அழைப்பதாலும் அச்சமடைந்துள்ள சிங்கள தலைவர்களால் தமக்கு எதிராக மேலும் பல அதிசயங்கள் இலங்கைத் தீவு அரசியலில் நடக்கக்கூடும் என்றும் அவர் எதிர்வு கூறினார்.

இந்தியாவைக் கையாள தங்களால் தான் முடியுமென இந்த தலைவர்கள் இதுவரைக் காலமும் நம்பியிருந்தனர்.

ஆனால், இப்போது அது ஜே.வி.பியினாலும் முடியுமென்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதையும் அவர் விபரித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...