‘இந்தியாவின் ஒரு பகுதிதான் இலங்கை’:ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்குவாதம்

Date:

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த கருத்து பல்வேறு மட்டத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அறிக்கைக்கு எதிராக அரசியல் காட்சிகள் மற்றும் அரசியல் தலைமைகள் நாளாந்தம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையிலே  இன்று (20) நாடாளுமன்றத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியமையானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா என  விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இந்த விடயம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா அல்லது தனிப்பட்ட கருத்தா என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தொடர்பில் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன உரிமை உள்ளது எனவும் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், குறித்த விடயம் சமூக ஊடகங்களில் திருப்பு படுத்தப்பட்டுள்ளதாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...