‘இலங்கை சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபையின் விசேட நிகழ்வு

Date:

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபை விஷேட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறும்.

தேசிய ஷூரா சபை தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர், தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பெளத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலைய பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு தூதுவர்), அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் [நளீமி] பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைநெறிகள் பீடம் ஜாமிஆ நளீமிய்யா ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் தேசிய நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பினை பறைசாற்றும் இவ்வரலாற்று நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மஜ்லிஸ் அங்கத்தவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் சமூக நலன் அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...