கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவு பேருரை 17ம் திகதி!

Date:

அமரர் டாக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நினைவுச் சொற்பொழிவு  எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45 க்கு கொழும்பு 10 ஒராபி பாஷா மாவத்தை, இல 406 இல் அமைந்துள்ள சாஹிரா கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘இலங்கை முஸ்லிம், தமிழ்த் தலைவர், செனட்டர் அஸீஸின் உரைகளில் சட்டமும் அதன் நிகழ்கால முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.சொர்ணராஜா உரை நிகழ்த்தவுள்ளார்.

சர்வதேச திட்ட ஆலோசகர் கேப்டன் ஏ.ஜி.ஏ. பாரி மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் எம்.சி. ரசூல்தீன் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அறக்கட்டளையின் தலைவர் காலித் எம்.ஃபாரூக் மற்றும் அகில இலங்கை வைஎம்எம்ஏ மாநாட்டின் தேசிய தலைவர் இஹ்சான் ஏ.ஹமீட், ஆகியோர் நிகழ்வுக்கு இணைத் தலைமை தாங்குவர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...