கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவு பேருரை 17ம் திகதி!

Date:

அமரர் டாக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நினைவுச் சொற்பொழிவு  எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45 க்கு கொழும்பு 10 ஒராபி பாஷா மாவத்தை, இல 406 இல் அமைந்துள்ள சாஹிரா கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘இலங்கை முஸ்லிம், தமிழ்த் தலைவர், செனட்டர் அஸீஸின் உரைகளில் சட்டமும் அதன் நிகழ்கால முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.சொர்ணராஜா உரை நிகழ்த்தவுள்ளார்.

சர்வதேச திட்ட ஆலோசகர் கேப்டன் ஏ.ஜி.ஏ. பாரி மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் எம்.சி. ரசூல்தீன் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அறக்கட்டளையின் தலைவர் காலித் எம்.ஃபாரூக் மற்றும் அகில இலங்கை வைஎம்எம்ஏ மாநாட்டின் தேசிய தலைவர் இஹ்சான் ஏ.ஹமீட், ஆகியோர் நிகழ்வுக்கு இணைத் தலைமை தாங்குவர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...