குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.

மத்திய காசாவில், குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியாகாத நிலையில் தான், தெற்கு கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையைச் சுற்றி, இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதல்களில் 21 பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு மருத்துவமனையின் மேற்கூரையில் திரண்டிருந்த இளைஞர்கள் குழுவையும் தாக்க இஸ்ரேலிய ட்ரோன்கள் குறிவைத்துள்ளன. குடும்பத்தினருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயன்ற குழுவினரே இவ்வாறு குறிவைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களினால் இதுவரையில் காஸாவில் 27,947 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...