சவூதியில் 1000 தாதியர் வெற்றிடங்களுக்கான நேர்காணல்கள் கொழும்பில்..!.

Date:

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலைக்கான வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.

முதல் சுற்றில் தாதியர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான தாதியர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாவது சுற்றில், தாதியர் டிப்ளோமா பெற்றவர் தாதியர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் உள்ள ஆயிரம் தாதியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடத்தப்படுகிறது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...