ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாரம் அவுஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
அதன் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
எதிர்வரும் 08 மற்றும் 09ம் திகதிகளில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.