தாய்நாட்டின் ஆள்புலத்துக்கு அரணாகச் செயற்படுவது அவசியம்: முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்

Date:

நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவுகூர வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து நம் நாடு மீண்டு இன்றுடன் 76 வருடங்களாகின்றன. பிரித்தானியாவின் ராஜதந்திரங்களால் நமது நாட்டு வளங்கள் மலிமாக மட்டுமன்றி சுயநலத்துக்காகவும் பாவிக்கப்பட்டது.

நாம் பெற்ற சுதந்திரம் அந்நிய கலாசாரங்களின் திணிப்பிலிருந்தும் நம்மை பாதுகாத்தது.

இன்று சகல சமூகத்தினரும் தங்களது அடையாளங்களுடன் வாழக் கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. எமது நாட்டின் எதிர்காலம் சுதந்திரத் தின யதார்த்தங்களை புரிந்து வாழ்வதில் தானுள்ளது.

இலங்கையில் வாழும் நாம்,ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து 76 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சுதந்திரத்தை பெறுமதியானதாக்குவோம்.

பிரிந்து அல்லது பிளவுபட்டு நமது தாய் நாட்டின் ஆள்புலமைக்கு ஆபத்து ஏற்படாது பாதுகாக்க இந்த நாளில் உறுதிபூணுவோம்.

நாடு பெற்ற சுதந்திரம் நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில்,பணிகளை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...