நபியவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான மாபெரும் கண்காட்சி கொழும்பில்

Date:

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான மாபெரும் கண்காட்சி எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 04ம் திகதி வரை காலை 9.00 மணி முதம் இரவு 8.00 மணி வரை கொழும்பு வெல்லம்பிட்டிய, நாஸ் கலாச்சார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கண்காட்சியினை நாஸ் கலாச்சார நிலையமும், தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இக்கண்காட்சியில் ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை, நபியவர்களின் பிறப்பு முதல் 40 வயது வரையான காலப்பகுதி, நபி (ஸல்) அவர்கள் மக்கள வாழ்வில் எதிர்கொண்ட துன்பங்களும் சவால்களும், நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்வும் வெற்றிகளும், நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிமிக்க குடும்ப வாழ்வும், அதன் முகாமைத்துவங்களும், நபி (ஸல்) அவர்களின் ஆளுமைமிக்க சகல வாழ்வியல் கலைகளும் தத்துவங்களும் எனும் தலைப்பிலான கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பார்வையிடுவதற்கு ஏற்றாற் போல் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களை 0770754218/ 777307945 எனும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...