பிரித்தானிய மன்னர் சார்லஸ்க்கு புற்று நோய் பாதிப்பு!

Date:

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

75 வயதான மன்னர், சமீபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான தகவலில், மன்னருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

சிகிச்சையில் இருக்கும் காலப்பகுதியில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு வைத்தியர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை வழக்கம் போல் மேற்கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...